Wednesday, May 6, 2009

பிணந்திண்ணி




காட்டில் பதுங்கி ஓடித்திரிந்து
கண்டதும் வேகம் எடுத்து
ரத்தம் பீறிட்டு ஒழுக
கொன்று கிழித்து உண்ணும்
மாமிசப்பட்சினி

ரோட்டில் அலைந்து தேடித்திரிந்து
கண்டதும் பணம் எடுத்து - அதைக்கொண்டு
அறை கிலோ பிணம் எடுத்து
வீட்டில் கழுவி சமைத்து உண்ணும்
நானும், இதை படிக்கும் நண்பா நீயும்
இயற்கையின் படைப்பில் பிணந்திண்ணிகள் தானே?!

- நான்

No comments:

Post a Comment

இங்கு படித்தவை பிடித்திருந்தால்.......கிழே தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.....
பிடிக்கவில்லை எனில் கற்று கொடுங்கள். நன்றி

- அககினிப்பழம்