சமூகத்தில் நடக்கும் வெட்கக்கேடுகளை தினம் கண்டு, எதுவும் செய்ய திராணி அற்று, கணம் தோறும் புலம்பும் ஒரு சாமான்ய தமிழ் குடி நான்.
இயற்கையில் உள்ள சிறு சிறு விஷயங்களிலும் அழகை காணத்துடிக்கும் ஒரு சிறிய பறவை நான்.
என்றேனும் ஒரு நாள் பலித்துவிடும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும்
கனா காணும் ஒரு அற்ப மானிடன் நான்.
ஆசை, இன்பம், துன்பம், வெறுப்பு, வலி எல்லாம் கொண்ட மனிதர்களின் ஒரு சிறிய உணர்ச்சி துளி நான்..............
good one
ReplyDelete