Friday, June 5, 2009

உலகம்.....


கத்தும் தவளையாய் இன்றி பாடும் குயிலாய் இரு-
உலகம் உன்னை விரும்பும்

வெட்டும் கத்தியாய் இல்லாமல் சேர்க்கும் ஊசியாய் இரு-
உலகம் உன்னை போற்றும்

நண்பனை விரோதிக்காமல் எதிரியை நட்பு செய் -
உலகம் உன்னை மெச்சும்

கெட்டதை செய்யாமல் நல்லதை மட்டுமே செய்துப்பார் -
உலகம் உன்னை ஏமாற்றும்

உன்னை பற்றிய நிழல்களை மறைத்து உன்னிடம் இல்லாத
நிஜங்களை சொல்லிப்பார் -
உலகம் உன்னை காப்பாற்றும்

தீயவைகளை கண்டு பொறுக்காமல் பொங்கி எழு-
பின் எழ உயிர் இருக்காது. உன் பெயர் சரித்திர புத்தகத்தில் இடம் பெரும்

- நான்

நீ.....


நண்பனுக்கு விட்டு கொடுப்பதை விட
விரோதிக்கு விட்டுக்கொடுத்து பார்
உன் உயர்வு வெளிப்படும்

பிச்சைகாரனுக்கு கொடுப்பதைவிட
துன்பப்படுபவனுக்கு கொடுத்துப்பார்
உன் கொடை உள்ளம் வெளிப்படும்

நல்லவனை மன்னிப்பதை விட
தீயவனை மன்னித்துப்பார்
உன் பெருந்தன்மை வெளிப்படும்

மற்றவரை நம்பி வாழ்வதை விட
உன்ன நம்பி வாழ்ந்துப்பார்
உன் திறமை வெளிப்படும்

உன் குறைகளை எண்ணிப்பார்பதை விட
நிறைகளை எண்ணிப்பார் - அப்போது
உனக்குள் இருக்கும் நீ வெளிப்படுவாய்.

- நான்

தாயின் மறுபக்கம்




என் தாயும் கொடுமைக்காரிதான்
என்னை காற்றும் ஒளியும் இல்லாத
சிறையில் அடைத்தாளே...........
பத்து மாதங்கள்.

ஏழை....





வீட்டை விட்டு வெளியே ஓடினான் -
மழையில் நனையாமல் இருக்க

நம்பிக்கை


கடின உழைப்பில் வியர்வை இழக்கலாம்
லட்சியம் கருதி உன் உறக்கம் இழக்கலாம்
உயிர்களை காக்க இரத்தம் இழக்கலாம்
ஏழைக்கு உணவளிக்க பணத்தை இழக்கலாம்
அவன் மானம் காக்க சில உடைகள் இழக்கலாம்
நேர்மை காக்க உன் நண்பர்களை இழக்கலாம்
நல்ல செயலுக்காக உன் நேரத்தை இழக்கலாம்
பிறரை மகிழ்விக்க உன் சிரிப்பை இழக்கலாம்
குழந்தைக்காக உன் உயிரையும் இழக்கலாம்
ஆனால்...........
உன் உயிர் உள்ளவரைக்கும் நம்பிக்கை மட்டும் இழந்துவிடாதே.

- நான்

அம்மாவின் அவர்!

எதற்கெடு அம்மா வேணும்
அப்பாவிற்கு
சகலவிதமான பசி தீர்க்க
கை கால் பிடித்து விட
வைகறையில் எழுப்ப
உதைத்து வசைபாடி
கோபம் தணிக்க
கோவணம் துவைக்க
என எதற்கெடுத்தாலும்......

எதற்கும் தேவை இல்லை அப்பா
அம்மாவிற்கு
விடியலில் வாசல் தெளித்து
கோலம் போட
சுள்ளி பொருக்கி சோறு சமைக்க
எனக்கு நிலாச்சோறு ஊட்ட
இரவுமட்டுமறிய அழ
இப்படி எதற்கும்

எனினும் அம்மா சொல்கிறாள்
"எனக்கெல்லாமே அவருதாங்க"

- பெ. கனகராசு

ஆதலால்.......


கண்கள் இருக்கும் இடத்தில் பட்டாம்பூச்சிகள் இருந்ததால் உனக்கு -
இதயம் இருக்கும் இடத்தில் எதுவும் இல்லை எனக்கு!!!!!.........