Friday, June 5, 2009
நீ.....
நண்பனுக்கு விட்டு கொடுப்பதை விட
விரோதிக்கு விட்டுக்கொடுத்து பார்
உன் உயர்வு வெளிப்படும்
பிச்சைகாரனுக்கு கொடுப்பதைவிட
துன்பப்படுபவனுக்கு கொடுத்துப்பார்
உன் கொடை உள்ளம் வெளிப்படும்
நல்லவனை மன்னிப்பதை விட
தீயவனை மன்னித்துப்பார்
உன் பெருந்தன்மை வெளிப்படும்
மற்றவரை நம்பி வாழ்வதை விட
உன்ன நம்பி வாழ்ந்துப்பார்
உன் திறமை வெளிப்படும்
உன் குறைகளை எண்ணிப்பார்பதை விட
நிறைகளை எண்ணிப்பார் - அப்போது
உனக்குள் இருக்கும் நீ வெளிப்படுவாய்.
- நான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
இங்கு படித்தவை பிடித்திருந்தால்.......கிழே தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.....
பிடிக்கவில்லை எனில் கற்று கொடுங்கள். நன்றி
- அககினிப்பழம்