Friday, June 5, 2009

உலகம்.....


கத்தும் தவளையாய் இன்றி பாடும் குயிலாய் இரு-
உலகம் உன்னை விரும்பும்

வெட்டும் கத்தியாய் இல்லாமல் சேர்க்கும் ஊசியாய் இரு-
உலகம் உன்னை போற்றும்

நண்பனை விரோதிக்காமல் எதிரியை நட்பு செய் -
உலகம் உன்னை மெச்சும்

கெட்டதை செய்யாமல் நல்லதை மட்டுமே செய்துப்பார் -
உலகம் உன்னை ஏமாற்றும்

உன்னை பற்றிய நிழல்களை மறைத்து உன்னிடம் இல்லாத
நிஜங்களை சொல்லிப்பார் -
உலகம் உன்னை காப்பாற்றும்

தீயவைகளை கண்டு பொறுக்காமல் பொங்கி எழு-
பின் எழ உயிர் இருக்காது. உன் பெயர் சரித்திர புத்தகத்தில் இடம் பெரும்

- நான்

No comments:

Post a Comment

இங்கு படித்தவை பிடித்திருந்தால்.......கிழே தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.....
பிடிக்கவில்லை எனில் கற்று கொடுங்கள். நன்றி

- அககினிப்பழம்