
காவிரி நதி நீர் மறுக்க படும்
பாலாற்றில் புது அணை கட்டப்படும்
தமிழனுக்கு எதிராக ஆயுதம் அனுப்பப்படும்
தமிழன் என்றாலே எம் பிரதமருக்கு வாய் மூடிவிடும்
எங்கள் பிரச்னை கசக்கும்
எமது ஒட்டு மட்டும் இனிக்கும்
ஒரு சீக்கியன் அடி பட்டாலும் கண்டனம் தெரிவிப்பார்
லட்சம் தமிழர் மடிந்தாலும் வேடிக்கை பார்பார்
எம் மாநிலத்தில் எந்த அந்நியரும் பாதுகாப்பாய் இருப்பார்
எம் மொழியினரோ அண்டை மாநிலத்தில் பயந்து பயந்து வாழ்வார்
பணம் இல்லாவிட்டாலும் வேற்றானுக்கு ஊர்வலம்
கோடிகள் இருந்தாலும் தமிழன் என்றால் கேவலம்
இந்த அழகில் எப்படி சொல்ல முடியும் நான் இந்தியன் என்று..........!!!!!!!!!!!!!
- நான்