Showing posts with label kaadhal. Show all posts
Showing posts with label kaadhal. Show all posts

Saturday, May 9, 2009

என்னுயிரே.......


அன்னம் ஒத்த நடை என்றேன்
கொடியை போன்ற இடை என்றேன்
கார்மேகமாய் கூந்தல் என்றேன்
வான் நீலமாய் விழிகள் என்றேன்
வில்லை போல புருவம் என்றேன்
ஒரு கிளியை போல உருவம் என்றேன்
சிப்பியாய் இருக்கும் இதழ்கள் உள்ளே
முத்துப் போன்ற பற்கள் என்றேன்......

இப்படி இயற்கையோடு
ஒப்பிட்டதால் தானோ என்னவோ பெண்ணே
இயற்கை "எய்த" தூண்டினாய் என்னை....

- நான்

Thursday, May 7, 2009

காதல் தோல்வி




நீ இருந்தால் தான் வாழ முடியும் என்று
எல்லோரை போலவும் நான் உளர மாட்டேன்
நீ இல்லாமல் வாழ்வது எப்படி என்று மட்டும்
சொல்லிக்கொடு.................
மணக்க வேண்டி விரும்பவில்லை உன்னை
விரும்பியதால் மணக்கத்துடிக்கிறேன்.

- நான்